சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெப்பசலனம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நடுவட்டத்தில் 20 மி.மீ மழையும், கூடலூரில் 10 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பாரிமுனை, பெரம்பூர், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.
இதேபோல் அண்ணாசாலை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது. திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், சாந்தோம், காமராஜர் சாலை, தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கனமழை பெய்தது.
காஞ்சிபுரத்தில் மழை:
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் பரவலாக மழை பெய்தது. வாலாஜா. உத்திரமேரூர் உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.












Click it and Unblock the Notifications