கனமழை: இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை! குமரியில் 100 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை தொடர்வதால் இன்றும் பல இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதால் 100 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் நேற்று 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. சென்னை நகரில் நேற்று படிப்படியாக மழை குறைந்து மேகமூட்டமாக இருந்தது.

இன்று காலையில் திடீரென சில நிமிடங்கள் மழை பெய்து பின்னர் வெயில் அடிக்கத் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டி வருகிறது.
இதனால் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப் போல் புதுவை மாநிலத்திலும் மழை தொடர்கிறது. இதனால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணை 45 அடியை எட்டிய நிலையில் திருவட்டாறு, திற்பரப்பு உட்பட 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications