ஜில் ஜில் கூல் கூல்... ஊட்டியானது சென்னை... பல்வேறு இடங்களில் மழை!
Recommended Video

சென்னை: சென்னை மாநகரம் ஊட்டி, கொடைக்கானல் போல படு கூலாக மாறி காணப்படுகிறது. நேற்று இரவு முதல் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் நகரமே குளிர்ந்து போய் விட்டது.
மத்திய வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்ட வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் நேற்று முன் தினம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் அதிகாலை வரை மழை பெய்தது. கடந்த இரு தினங்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்நிலையில் இன்று மாலை சென்னை வளசரவாக்கம், பட்டினப்பாக்கம், அடையாறு, முகப்பேர், அமைந்தகரை, அண்ணா நகர், கோயம்பேடு , குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. பெரும் காற்றுடன் மழை பெய்ததால் ஆங்காங்கே சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
சென்னையில் பல இடங்களில் மழை
— Oneindia Tamil (@thatsTamil) September 18, 2018
சென்னை வளசரவாக்கம், பட்டினப்பாக்கம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் மழை#ChennaiRains pic.twitter.com/Af3yWqlMjx
நகரின் பல பகுதிகளிலும் மழை நீர் தேங்கி ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் அலுவலகம், பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்புவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நகரின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை இருந்து வருகிறது.












Click it and Unblock the Notifications