கிருஷ்ணகிரியில் இடி மின்னலுடன் கனமழை.. மக்கள் ஹேப்பி!
கிருஷ்ணகிரியில் இடி மின்னலுடன் கொட்டிய கனமழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
ஓசூர்: கிருஷ்ணகிரியில் இடி மின்னலுடன் கொட்டிய கனமழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியுள்ளது.

சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். வேலூர், திருத்தனி உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இடி மின்னலுடன் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.
பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலையில் இதமாக மழை பெய்ததால் மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications