2 நாட்களுக்கு மழை பெய்யும்.. தமிழகம், புதுச்சேரியில்
சென்னை: வெப்பச் சலனம் நீடிப்பதால் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தற்போது சென்னையில் இரவிலும், அதிகாலையிலும் மழை பெய்கிறது. பகலில் நல்ல வெயில் அடிக்கிறது. வெயில் நீடித்து வருவதால் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது.

சென்னை நகரை விட புறநகர்ப் பகுதிகளில்தான் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்ச்சியும் உருவாகியுள்ளதால் இன்று முதல் 2 நாட்களுக்கு தமிழகம் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும். குறிப்பாக மாலை, இரவு அதிகாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். இது தவிர கேரளா, லட்சத்தீவு ஆகிய தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகத்திலும் இதன் தாக்கம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் குறிப்பாக தாம்பரம் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டமாக உள்ளது.












Click it and Unblock the Notifications