தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு
சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டஙகளில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில் இன்று அதிகபட்சமாக 97 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலை இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இதனால் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பிற மாவட்டங்களில் பொதுவான வறண்ட வானிலையே நிலவும். வரும் மார்ச் 30-ந் தேதி வரை இத்தகைய வறண்ட வானிலை நிலவும்.
வெப்பநிலையைப் பொறுத்தவரையில் நாளை மறுநாள் மார்ச் 26 முதல் மார்ச் 28-ந் தேதி வரை ஒரு சில பகுதிகளில் வழக்கத்தைவிட 5 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலை உயர்ந்து காணப்படும்.
சென்னை மாநகரில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; மழை பெய்ய வாய்ப்பு இல்லை.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணிநேரத்தில் விழுப்புரத்தில் 5செமீ மழை பதிவானது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 3 செமீ மழை பதிவானது. இதேபோல ஈரோடு மாவட்டத்தின் குண்டேரிப்பள்ளம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களிலும் 3 செமீ மழை பதிவானது. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications