For Quick Alerts
For Daily Alerts
Just In
திருப்பூர் அருகே முதியோர் இல்ல கூரை விழுந்து 2பேர் சாவு
திருப்பூர்: பலத்த காற்றுடன் பெய்த மழையால் முதியோர் இல்லத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்தனர், 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவிநாசி அருகேயுள்ள காசகவுண்டன்புதூர் பகுதியில் இன்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் தாக்கத்தால் இங்குள்ள முதியோர் மற்றும் குழந்தைகள் இல்லத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் குழந்தைகள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்த அனைவரும் அவிநாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Comments
English summary
Heavy rain with strong wind claims 2 lives in Kasagoundanputhur near thirupur in Tamilnadu today.
Story first published: Wednesday, May 21, 2014, 18:10 [IST]