வெறும் காத்துதான் வீசுது.. மறுபடியும் எப்ப மழை பெய்யும் ரமணன் சார்?

நேற்று இரவு தொடங்கிய மழை இன்று காலை வரை விடவில்லை. பொல பொலவென கொட்டிய மழையால் சென்னையே நனைந்து நடுங்கிப் போய் விட்டது.
காலையிலும் மழை நிற்காமல் பெய்த காரணத்தால்தான் சென்னையிலும், சென்னையை ஒட்டியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் விடுமுறையே விட்டார்கள்.
ஆனால் இப்போது மழை சற்று நின்றுள்ளது. வானம் மேகமூட்டமாக இருக்கிறது. மழை இல்லாத நிலையில் காற்று வீசிக் கொண்டிருக்கிறது. சில இடங்களில் காற்று பலமாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
மழை விட்டுள்ளதால் வீட்டுக்குள் காயப் போட்டிருந்த துணிகளைத் தூக்கி வெளியில் காயப் போடுவதில் மக்கள் மும்முரம் காட்டினர்.
மழை நான்கு நாட்களுக்கு நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், இப்போதைக்கு மழை நின்றிருந்தாலும் கூட தொடர்ந்து மழை இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் மக்களும் உள்ளனர்.
கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சி. குறிப்பாக காவிரி டெல்டாப் பகுதிகளில் நல்ல மழை கொட்டியுள்ளதால் விவசாயிகளும் கூட மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர்.












Click it and Unblock the Notifications