நெல்லையில் தொடர் மழை... ஐந்தருவியில் ஆனந்த நீராடும் மக்கள் கூட்டம்!
நெல்லையில் கடும் கோடையில் தென்காசி, செங்கோட்டை,குற்றாலம்,புளியரை,மேக்கரை உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் ஐந்தருவி, மெயின் அருவியில் நீர்கொட்டுவதால் மக்கள் மகிழ்ச்சியு
நெல்லை: நெல்லை செங்கோட்டை,தென்காசி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் ஐந்தருவியில் தண்ணீர் வீழுவதால் மக்கள் உற்சாகமாக நீராடி மகிழ்ந்து செல்கின்றனர்.
தமிழ்நாட்டில், 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறட்சி தாண்டவமாடி வருகிறது. இதனால், பயிரிடப்பட்ட பயிர்கள் கருகி வருகின்றன. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 110 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெப்பநிலை நிலவிவந்து மக்களைத் துன்பத்துக்குள்ளாக்கி வருகிறது.

இந்நிலையில் திருநெல்வேலியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தென்காசி செங்கோட்டை,குற்றாலம்,புளியரை,மேக்கரை உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
இந்த மழையின் காரணமாக வறண்டு கிடந்த குற்றாலம் மெயின் அருவியிலும் ஐந்தருவியிலும் நீர்விழத் தொடங்கியுள்ளது. வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாத மக்கள் இந்த அருவிகளை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
கோடை விடுமுறை காலம் என்பதால் அருவியில் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. இன்னும் சிலநாட்கள் மழை தொடர்ந்து பெய்தால் அருவியில் நீர் தொடர்ந்துகொட்டும். மக்களும் இந்த கோடையில் நீராடி மகிழ்வர்.












Click it and Unblock the Notifications