24 மணிநேரத்திற்கு மழை நீடிக்கும்… குடையோட போங்க… சொல்வது ரமணன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் இதனை தெரிவித்தார்.

தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடைக்கு இதமாக கடந்த சில நாட்களாக ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மற்றும் குடவாசல், நன்னிலம், கொறடாச்சேரி சுற்றுவட்டாரத்தில் இன்று மதியம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

Rain will continue next 24 hours in TN, Pondy says Ramanan

சென்னை தீபகற்கத்தின் மேல் அடுக்குகளில் காற்றின் போக்கு சாதகமாக உள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறியுள்ளார். தமிழகத்தின் உள்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றார் ரமணன்

மேலும் அவர், கடந்த 24 மணி நேரத்தில் பள்ளிப்பட்டு, செங்கம் ஆகிய இடங்களில் 11 செ,மீ மழை பதிவாகி உள்ளதாகவும், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் 7 செ.மீ மழையும், உடுமலைப்பேட்டை, கலவை ஆகிய இடங்களில் 6 செ,மீ மழையும் பதிவாகி உள்ளதாகவும் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+