For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6ஆம் தேதி வரை மழை தொடருமாம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அக்டோபர் 6ஆம் தேதி வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அக்டோபர் 6ஆம் தேதி வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

Rain will continue in Tamil Nadu till Oct 6th : Chennai meteorological center

இந்நிலையில் வங்க கடலில் ஆந்திரா முதல் தமிழகத்தின் வடக்கு மாவட்டங்கள் வரை வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்த மழை 6ம் தேதி வரை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையால் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Chennai Meteorological center says that rain will continue in Tamil Nadu and Puducherry till Oct 6th. Chennai will be cloudy and some places will get rain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X