For Daily Alerts
Just In
வங்கக் கடலில் இருந்து ஈரக்காற்று வீசுகிறது... தமிழகத்தில் மழை தொடரும்: வானிலை மையம்
சென்னை: வங்கக் கடலில் இருந்து கரையை நோக்கி ஈரக்காற்று வீசுவதால், தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் அவ்வப்போது லேசான தூறல், பின்னர் வெயில் என மாறி மாறி வானிலை காணப்படுகிறது.
கடந்த 24 மணிநேரத்தில் திருக்கோவிலூரில் அதிகபட்சமாக 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னை கேளம்பாக்கம், பூண்டியில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில், வங்கக் கடலில் இருந்து கரையை நோக்கி ஈரக்காற்று வீசுவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்த வரை சில இடத்தில் லேசான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Comments
English summary
The metrological department has announced that the rain will continue in Tamilnadu and pudhuchery for next twenty four hours.
Story first published: Sunday, December 14, 2014, 15:43 [IST]