அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு
சென்னை: அடுத்த, 24 மணி நேரத்தில், தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், தென்மேற்கு பருவமழை காலம் இம்மாதத்துடன் முடிவடைய உள்ளது. மழை மறைவு பிரதேசமான தமிழகத்தில், கோவை, நீலகிரி, நெல்லை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.லட்சத்தீவுகள் அருகில் உருவாகிய காற்று மேலடுக்கு சுழற்சியால், கடந்த சில தினங்களாக, பல பகுதி களிலும் கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக, வடதமிழகத்தின் பல பகுதிகளில், மழை பெய்துள்ளது.லட்சத்தீவுகள் அருகில் உருவாகிய காற்று மேலடுக்கு சுழற்சியானது, குமரி கடல் பகுதி வரை நீடித்துள்ளது. எனவே, அடுத்த, 24 மணி நேரத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், மிதமான மற்றும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெங்களூரை பொருத்தளவில் மாலை மற்றும் இரவு வேளைகளில் கன மழை பெய்யக்கூடும்.
தமிழகத்துக்கு அதிக அளவு மழையை கொண்டுவரும் வடகிழக்கு பருவமழைக்காலம் அடுத்த மாதம் 20ம்தேதிக்கு பிறகு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.