தமிழகம் முழுவதும் பிரேக் விடப்போகுதாம் மழை.. சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்!
தமிழகம் முழுவதுமே புதன் கிழமையில் இருந்து மழை இருக்காது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: தமிழகம் முழுவதும் புதன் கிழமையில் இருந்து மழை இருக்காது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாய் கனமழை கொட்டி வருகிறது. இதேபோல் புதுச்சேரியிலும் நல்ல மழை வெளுத்து வாங்குகிறது.
தொடர் மழையால் ஒரு வாரமாக சென்னை உட்பட பல கடலோர மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இன்று மழை பெய்யும்
இந்நிலையில் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் புதன் கிழமையில் இருந்து மழை இருக்காது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இன்று முழுவதும் சென்னையில் மழை பெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

உள்மாவட்டங்களில் மழை..
காலையில் இருந்து பெய்துவரும் சாரல்மழை தீவிரமடையும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

மாலை முதல் குறையும்
நீலகிரி, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, நெல்லை, திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். டெல்டா மாவட்டங்களில் இன்று மாலை முதல் மழை குறையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மறைவதால் மழை இருக்காது
கடந்த சில நாட்களாக வங்கக்கடலில் நீடித்து வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மறைவதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் புதன் கிழமைக்குப் பிறகு இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

புயலை பொருத்தே இனி மழை
தாய்லாந்து வளைகுடா பகுதியில் உருவாகியுள்ள புயல் தற்போது பலவீனமடைந்துள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். அது வங்கக்கடலுக்கு வருவதை பொறுத்தே தமிழகத்தில் இனி மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
-
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன்












Click it and Unblock the Notifications