இலங்கையில் கோவில்களை இடித்த ராஜ்பக்சே திருப்பதி வர அனுமதிக்கக் கூடாது: ராமதாஸ்
சென்னை: இலங்கையில் ஆயிரக்கணக்கான இந்து ஆலயங்களை இடித்து தரைமட்டமாக்கிய அந்நாட்டு அதிபர் ராஜபக்சே திருப்பதி வர அனுமதிக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இலங்கையில் லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதற்கு காரணமான இலங்கை அதிபர் ராஜபக்சே டிசம்பர் 9-ஆம் தேதி திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயத்துக்கு வர இருப்பதாகவும், அடுத்த நாள் காலை சுவாமி தரிசனம் செய்ய இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

ஈழத்தில் 2,000-க்கும் அதிகமான இந்து ஆலயங்களை இடித்து தரைமட்டமாக்கிய அவரை திருப்பதி ஆலயத்தில் மரியாதையுடன் வரவேற்பது சாத்தானுக்கு சாமரம் வீசுவதற்கு இணையான செயலாகும். தமிழர்களின் உணர்வுகளை இதைவிட மோசமாக யாராலும் புண்படுத்த முடியாது.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா என தமிழர்கள் அதிகம் வாழக்கூடிய நாடுகளில் சுதந்திரமாக நடமாட முடியாத ராஜபக்சே நினைத்தபோதெல்லாம் இந்தியா வந்து செல்ல மத்திய அரசு அனுமதிப்பது சரியல்ல. எனவே, அவர் திருப்பதி வர அனுமதிக்கக் கூடாது என் அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications