தென்காசி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்த சோதனை!
ராஜபாளையம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லிங்கமுக்கு எதிராக ராஜபாளையத்தில் பொது மக்கள் திரண்டு வருகின்றனர்.
தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராஜபாளையத்தில் அதன் ரயில் நிலையம் அருகே உள்ள சத்திரப்பட்டி மேம்பாலத்தை ஐந்து ஆண்டுகளுக்குள் அமைத்தே தீருவேன் சென்ற தேர்தலின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லிங்கம் வாக்குறுதி வழங்கினாராம். ஆனால் வெற்றி பெற்ற பிறகு அந்த வாக்குறுதியை அவர் காப்பாற்றவில்லை என அப்பகுதி பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் ரயில்வே கிராஸிங்கில் தினமும் சுமார் மூன்று மணி நேரம் வீணாவதாக பாதிக்கப்பட்டவர்கள் புலம்புகின்றனர். மேலும் சிவகிரி வழியாக உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் செம்பகவள்ளி அணையை சீரமைப்பேன் என்று அளித்த உறுமொழியையும் லிங்கம் காப்பாற்றவில்லையாம்.
எனவே, இந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் யார் வேட்பாளராக வந்தாலும் அவர்களுக்கு தங்களது பகுதி வாக்கு இல்லை என பகிரங்கமாகவே அறிவித்துள்ளார்கள் மக்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்த அடுத்த சோதனை என இதனை எடுத்துக் கொள்ளலாமா - அப்படி என்றால் முதல் சோதனை என்று எதனைச் சொல்வது தா.பாண்டியனைத் தான் என்கின்றனர் விவரம் அறிந்த கம்யூனிஸ்ட்கள்.












Click it and Unblock the Notifications