ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல்- டெல்லியில் தமிழக தேர்தல் அதிகாரி லக்கானி ஆலோசனை
ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையருடன் ஆலோசனை நடத்த தமிழக தேர்தல் அதிகாரி லக்கானி டெல்லி சென்றுள்ளார்.,
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையருடன் ஆலோசனை நடத்த தமிழக தேர்தல் அதிகாரி லக்கானி டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஓராண்டாக நடத்தப்படவில்லை. இத்தொகுதிக்கு டிசம்பர் 31-ந் தேதியுடன் தேர்தலை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே ஆர்.கே.நகரில் 40,000 போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக திமுக குற்றம்சாட்டியும் வருகிறது. இந்நிலையில் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி டெல்லி சென்றுள்ளார்.
டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதியுடன் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல், வாக்காளர் பட்டியல் விவகாரம் உள்ளிட்டவை குறித்து லக்கானி விவாதிக்க இருக்கிறார்.












Click it and Unblock the Notifications