கர்நாடக அணை குறித்த சர்ச்சைப் பேச்சு... மன்னிப்பு கோரினார் ரஜினியின் சகோதரர் !
சென்னை: காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவது சரியான நடவடிக்கையே என்ற தனது கருத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார் ரஜினியின் சகோதரரான சத்தியநாராயணா.
காவிரி ஆற்றின் குறுக்கே இரண்டு அணைகளைக் கட்ட திட்டமிட்டுள்ளது கர்நாடகா. இதற்கு தமிழக அரசியல் கட்சிகளும், டெல்டா மாவட்ட விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு கர்நாடகா அணை கட்டுவதன் மூலம் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் கிடைக்காது, விவசாயம் பாதிக்கப் படும் என அவர்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், ரஜினியின் பிறந்தநாளையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் ராகவேந்திரா மடத்தில் வெள்ளி தேர் இழுத்து, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற திருச்சி வந்திருந்தார் நடிகர் ரஜினியின் மூத்த சகோதரர் சத்தியநாராயணா.
அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய சத்தியநாராயணா, கர்நாடகாவின் அணை கட்டும் திட்டம் குறித்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. அதாவது, ‘கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது சரியான நடவடிக்கையே. இப்புதிய அணைகள் மூலம் இரு மாநில மக்களும் நன்மை அடைவார்கள். தமிழ்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படாது என அவர் தெரிவித்திருந்தார்.
ஊடகங்களில் வெளியான சத்தியநாராயணாவின் பேட்டி விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது. இதையடுத்து அடுத்த சில மணி நேரங்களிலேயே தனது கருத்தை வாபஸ் பெற்றுக் கொண்ட சத்தியநாராயணா, மன்னிப்பும் கோரினார்.
-
ரஜினிகாந்த்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட ஆதவ் அர்ஜுனா! அடுத்த வரியே கொடுத்த விளக்கம்! -
கால் வைக்கிற இடமெல்லாம் கன்னி வெடி.. ரஜினியை வைத்து விஜய்யை மொத்தமாக முடித்துவிட்ட ஆதவ் அர்ஜுனா -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications