மக்கள் வேண்டுமென்றேவா போடுகிறார்கள்? ரஜினி யாரை சமூக விரோதிகள் என்கிறார்? முத்தரசன் விளாசல்
ரஜினியின் கருத்து ஏற்புடையது அல்ல என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ரஜினி போன்றவர்களுக்கு போராட்டம் என்றாலே பிடிக்காது என்றும் சமூக விரோதிகள் என்று கூறிய ரஜினியின் கருத்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளதாகவும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பின் ரஜினி சென்னை திரும்பினார். அப்போது சென்னை திரும்பி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் கடைசி நாளில் சமூக விரோதிகள் நுழைந்து கெடுத்தது போன்று தூத்துக்குடி போராட்டத்திலும் சமூக விரோதிகள் நுழைந்துவிட்டதாக கூறினார். மேலும் போராட்டம் போராட்டம் என்று சொல்லி தமிழகத்தை சுடுகாடு ஆக்கிவிட வேண்டாம் என்றும் செய்தியாளர்கள் முன்னிலையில் ஆவேசமாக பேசினார்.

நடிகர் ரஜினியின் இந்த பேச்சு குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயலாளர் முத்தரசன் தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மக்கள் போராடினால் தமிழகம் ஏன் சுடுகாடாகிறது? மக்கள் வேண்டுமென்றேவா போடுகிறார்கள்? 99 நாட்கள் அமைதியாகத்தானே மக்கள் போராடினார்கள். 100-வது நாள் அன்றுதான் கலவரம் நடைபெற்றது.
ஆனால் ரஜினி யாரை சமூக விரோதிகள் என்கிறார் என புரியவில்லை. அதுவும் அதையே திரும்ப திரும்ப கூறுகிறார். இப்படி திரும்ப திரும்ப சமூக விரோதிகள் என்று சொல்வதால், தாக்குதலுக்கு காரணமானவர்களை ரஜினி காப்பாற்ற முயல்கிறாரா? ரஜினியின் கருத்து ஏற்புடையது அல்ல. நிராகரிக்க கூடியது. மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தக்கூடிய கருத்தாகும். ரஜினி போன்றவர்களுக்கு போராட்டம் என்றாலே பிடிக்காது.
இவ்வாறு முத்தரசன் தெரிவித்தார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications