ரஜினி டுவிட்டர் அக்கவுண்டை மர்மநபர்கள் திடீரென ஹேக் செய்ததால் பெரும் பரபரப்பு !
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் டுவிட்டர் அக்கவுண்டை மர்மநபர்கள் ஹேக் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முடக்கப்பட்ட சிறிது நேர்த்திலேயே ரஜினிகாந்தின் டிவிட்டர் கணக்கு செயல்பாட்டுக்கு வந்துவிட்டதாக அவரது இளையமகள் செளவுந்தர்யா ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உலகப்புகழ் பெற்றவர்கள், விஐபிகள் ஆகியோர்களின் இணையதளங்கள், சமூக வலைத்தள பக்கங்கள் அவ்வப்போது முடக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சற்று முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் @superstarrajini டுவிட்டர் அக்கவுண்ட் மர்ம்நபர்களால் ஹேக்கிங் செய்யப்பட்டது. முடக்கப்பட்ட அந்த அக்கவுண்ட் Rajinikanth #hittokill என்ற பெயரில் இருந்தது.
ஆனால் உடனடியாக ரஜினியின் டுவிட்டர் ஹேக்கர்களிடம் இருந்து மீட்கப்பட்டு தற்போது இயல்பு நிலையில் உள்ளது. இந்த தகவலை ரஜினியின் இளையமகள் செளந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
@superstarrajini appa's account was hacked..handle retrieved. Thank you all :) #AllIsWell
— Aishwaryaa.R.Dhanush (@ash_r_dhanush) August 2, 2016