For Daily Alerts
Just In
உண்மை.. உழைப்பு... உயர்வு... இதுவே ரஜினியின் மந்திரம்
உண்மை, உழைப்பு, உயர்வு என்பதே மந்திரம் என்று ரஜினி தெரிவித்தார்.
சென்னை: உண்மை, உழைப்பு, உயர்வு என்பதே மந்திரம் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் கடந்த 26-ஆம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து வருகிறார். அவர் முதல் நாளன்று தனது அரசியல் நிலைப்பாடு குறித்து 31-ஆம் தேதி அறிவிக்க போவதாக ரஜினி கூறியிருந்தார்.
இன்று ரஜினி பேசுகையில், இப்போதைக்கு விமர்சனங்கள் செய்யப்போவதில்லை.
சட்டசபை எப்போது வருகிறதோ அதற்கு முன்பு உரிய நேரத்தில் கட்சி ஆரம்பிப்போம்.
நாங்கள் எதை எதை செய்யப்போகிறோம் என்பதை முதலிலேயே அறிவிப்போம்.
செய்ய முடியாவிட்டால் 3 வருடங்களில் ராஜினாமா செய்வோம் என வாக்குறுதி அளிப்போம்.
நமது தாரக மந்திரம் உண்மை, உழைப்பு, உயர்வு. ஒவ்வொரு கிராமங்களிலும், தெருக்களிலும் மன்றங்களை வலுப்படுத்த வேண்டும் என்றார் ரஜினி.
Comments
English summary
Rajinikanth says that Truth- Hardwork- Progress is the Manthra.