அரசியலுக்கு வருவது உறுதி... ரசிகர்கள் மத்தியில் போர் முரசு கொட்டிய ரஜினி!
நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று ரஜினி ரசிகர்கள் மத்தியில் பேசியுள்ளார்.
சென்னை : அரசியலுக்கு வருவது உறுதி என்று ரசிகர்கள் மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்த அரசியல் நிலைப்பாடு குறித்த அறிவிப்பை ரஜினிகாந்த் இன்று வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

கட்டுப்பாடு ஒழுக்கத்துடன் 6 ஆயிரம் பேர் புகைப்படம் எடுத்துச் சென்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. கட்டுப்பாடு இருந்தால் போது நாம் எல்லாவற்றையும் சாதிக்கலாம்.
ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்வை சிறப்பாக நடத்திய ராகவேந்திரா மண்டப நிர்வாகிகளுக்கு நன்றி. அரசியலுக்கு வருவது பற்ற பயமில்லை, பெரிய ஜாம்பவான்களே பயப்படுகிறார்கள், நான் இன்னும் குழந்தை எனக்கு எப்படி இருக்கும். நான் ஏதாவது சொன்னால் அது விவாதம் ஆகிவிடுகிறது.
சோ சார் முதலிலேயே பயமுறுத்தி வைத்திருக்கிறார், மீடியாக்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். சோவை நான் மிகவும் மிஸ் செய்கிறேன்.
யுத்தம் செய் ஜெயித்தால் நாடாளுவேன், வீழ்ந்தால் வீடாளுவேன். யுத்தம் செய்யாமல் போனால் கோழை என்று சொல்வார்கள். நான் எல்லாத்தையும் ஏற்கனவே முடித்தவிட்டேன், இனிஅம்பு விடுவது தான் பாக்கி.
நான் அரசியலுக்கு வருவது உறுதி, வருகிற சட்டசபை தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன். உள்ளாட்சித் தேர்தலுக்கு குறைந்த காலமே இருப்பதால் நாம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என்றார்.
-
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம்












Click it and Unblock the Notifications