ஒரு கட்சியும் சரியில்லை... இதுதான் ரஜினி சொல்ல வரும் சேதி!
சென்னை: எல்லோரும் இருக்காங்க. ஆனால் சிஸ்டம் கரப்ட் ஆகி விட்டது. அதை சரி செய்ய வேண்டும். மாற்றம் வர வேண்டும். இதுதான் ரஜினியின் இன்றைய பேச்சு. இதன் சாராம்சம் (அரசியலுக்கு வந்தால்) நான் தனியாகத்தான் வருவேன். தனிக் கட்சிதான் தொடங்குவேன் என்பதே.
ரஜினி மீண்டும் அரசியல் பேச ஆரம்பித்து விட்டார். பல வருடமாக பூடகமாக பேசி வந்தார். இப்போது சற்று தெளிவாக குழப்ப ஆரம்பித்துள்ளார். அரசியலுக்கு வருவேன் என்று இப்போதும் கூட வெளிப்படையாக பேச அவர் தயாராக இல்லை. இருப்பினும் அரசியலை நோக்கி அவரும் மெல்ல மெல்ல நகர்ந்து வருவதை தனது பேச்சின் மூலமாக உணர்த்தி வருகிறார்.
இன்று ரசிகர்களுடன் நடக்கும் கடைசி நாள் சந்திப்பையொட்டி அவர் பேசுகையில் சில விஷயங்களை சற்றே தெளிவாகப் பேசினார். அதாவது கடந்த 20 வருடமாக இல்லாத அளவுக்கு இன்றுதான் கொஞ்சம் போல புரிவது போல பேசினார் ரஜினி.

யாருமே சரியில்லை
மு.க.ஸ்டாலின், திருமாவளவன், சீமான், அன்புமணி என தமிழகத் தலைவர்களை பாராட்டினார் ரஜினி. எல்லோரையும் புகழ்ந்தார். அவர்களின் திறமைகளை பாராட்டினார். ஆனால் யாருமே சரியில்லை என்று மறைமுகமாக கூறி விட்டார் ரஜினி. எந்தக் கட்சியும் சரியில்லை என்பதும் ரஜினி பேச்சின் பூடக அர்த்தமாகும்.

சிஸ்டம் சரியில்லை
எல்லோரும் இருக்காங்க. ஆனால் சிஸ்டம் சரியில்லையே கெட்டு விட்டதே என்று ரஜினி கூறியுள்ளார். அதாவது இத்தனை பேர் இருந்தாலும் கூட எதுவும் சரியில்லை என்பது ரஜினியின் முடிவு.

நான் சரி செய்ய விரும்புகிறேன்
அதை சரி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. அதை நான் செய்ய விரும்புகிறேன் என்பதும் ரஜினி பேச்சு உணர்த்தும் சேதி. தனிக் கட்சி தொடங்கும் விருப்பத்தில் அவர் உள்ளதாகவும் அவரது பேச்சு காட்டுகிறது.

மனக்கிடக்கை
இத்தனை காலமாக ரஜினி அரசியலுக்கு வர மாட்டார் என்று கூறி வந்தவர்கள் எல்லாம் ஆச்சரியப்படும் அளவுக்கு இன்றைய ரஜினி பேச்சு அமைந்துள்ளது. முதல் முறையாக அவர் "சிஸ்டம்" பற்றியெல்லாம் பேசியுள்ளார். இதுவும் அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது.

இதுவரை உறுதியில்லை, ஸ்திரமில்லை
ரஜினி இதுவரை எந்த முடிவையும் தெளிவாக, தீர்க்கமாக, உறுதியாக எடுத்ததில்லை. அவரது மன ஓட்டம் ஒவ்வொரு நாளும் ஒரு மாதிரியாக இருக்கிறது. நேற்று அரசியல் பற்றிக் கேட்காதீர்கள் என்றார், இன்று அவரே அரசியல் குறித்துப் பேசுகிறார். ஸோ, நாளை அவர் என்ன செய்வார் என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications