ரஜினியைத் தூக்கி காந்தி பக்கத்தில் அமர வைத்த புண்ணியவான்... எவன் பார்த்த வேலைடா இது!
சென்னை: தேசப்பிதா பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக உலா வருகிறது.
இது கம்யூட்டர் காலம். மனதில் நினைப்பதை இருந்த இடத்தில் இருந்தே செய்து விடக்கூடிய மாயத்தை கம்யூட்டர் தருகிறது.
அதிலும் போட்டோஷாப் மூலம் கருத்தமேனியை சிவக்க வைக்கிறார்கள், அமைந்தகரையில் அமர்ந்திருப்பவரை அமெரிக்காவில் உட்கார வைக்கிறார்கள்.

பூங்கொத்து...
சமீபத்தில் கூட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அலுவலர்கள் சிலர் பூங்கொத்து கொடுத்த போட்டோஷாப் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜன்னலுக்குள் சென்னை...
இதேபோல், மோடி சென்னை வெள்ளத்தைப் பார்வையிட்ட புகைப்படமும் போட்டோஷாப் மூலம் தயாரிக்கப்பட்டது என தோலுரிக்கப்பட்டது.

இதுவும் போட்டோஷாப் தான்...
மோடி பிரதமரானது முதல் பரபரப்பாக வலம் வந்த அவரது இளம் வயது புகைப்படமும் போட்டோஷாப் மூலம் உருவாக்கப்பட்டது என கடந்த வாரம் பாஜக அறிவித்திருந்தது.

ரஜினியும், காந்தியும்...
இந்நிலையில், தற்போது புதிய போட்டோஷாப் புகைப்படம் ஒன்று இணையத்தில் சூடாக வலம் வந்து கொண்டிருக்கிறது. மகாத்மா காந்தியுடன், ரஜினி அமர்ந்திருக்கும் படம் தான் அது.

சான்சே இல்லை...
இருவரும் ஒருவரைப் பார்த்து ஒருவர் சிரிப்பது போல் அந்தப்படம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இத்தகைய சம்பவம் ஒன்று நடந்திருக்க வாய்ப்பேயில்லை.

இப்டி பண்றீங்களேப்பா...
ஏனெனில் காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட ஆண்டு 1948. ஆனால், ரஜினி பிறந்ததே 1950ம் ஆண்டு தான்.
என்னப்பா இப்டி பின்னுறீங்களேப்பா!












Click it and Unblock the Notifications