ஆன்மீக அரசியல்னா அது வேற.. இந்த ஆத்மா இருக்கே அது வேற.. ரஜினி பேசுகிறார்!
சாதி,மதசார்பற்ற அறவழி அரசியல் தான் ஆன்மீக அரசியல் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : உண்மையான, நேர்மையான, நாணயமான சாதி மதச்சார்பற்ற அறவழி அரசியல் தான் ஆன்மீக அரசியல் என்று நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்திடம், கட்சியின் பெயர், சின்னம் முடிவு செய்யப்பட்டு விட்டதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினி கட்சியின் பெயர், கொடி பற்றி எனக்கே தெரியாது போகப் போகத் தான் தெரியும்.
மக்களை சந்திப்பேனா இல்லையா என்பதும் போகப் போகத் தான் தெரியும். ஆன்மீக அரசியல் என்றால் உண்மையான, நேர்மையான, நாணயமான சாதி மதச்சார்பற்ற அறவழி அரசியல். இது தான் ஆன்மீக அரசியல். ஸ்பிரிச்சுவாலிட்டி என்றால் ஸ்பிரிட் ஆத்மா அது வேறு என்று கூறினார்.
இதனிடையே சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்து ரஜினிகாந்த் பேசினார். அப்போது, என்னுடைய அரசியல் அறிவிப்பை உலக அளவில் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கு நன்றி என தெரிவித்தார். தமிழகத்தில் இருந்து தான் பல வரலாற்று மாற்றங்கள் அரசியிலில் நடந்துள்ளது.
அரசியலில் புரட்சியை ஏற்படுத்தவே நான் விரும்புகிறேன். தற்போது அரசியலில் மாற்றம் வந்தால் தான் எதிர்காலத்தில் மக்கள் நல்ல வாழ்வை வாழ முடியும். எஸ்எஸ்எல்சி தேர்வில் தோல்வியடைந்த பின்னர், நானும் 2 மாதங்கள் கன்னட செய்தித்தாள் ஒன்றில் ப்ரூப் ரீடராக பணியாற்றியிருக்கிறேன் என்றார். எனக்காக ஊடகத்தினர் போயஸ் கார்டனில் சாலை ஓரத்தில் காத்திருப்பது வருத்தமாக இருக்கிறது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல்வாதியாக அவதாரம் எடுத்ததற்குப் பிறகு மீடியாக்களை அவர் அணுகும் முறையில் முற்றிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. டிசம்பர் 26 முதல் ரசிகர்களை சந்திக்க ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு வரும் போதெல்லாம், போயஸ் கார்டனில் காத்திருந்த ஊடகத்தினரிடம் அதிரடியாக எந்த பேட்டியைத் தராவிட்டாலும் நின்று அவர்களின் கேள்விகளுக்கு மழுப்பலாகவாவது ஒரு பதிலை நின்று சொல்லிவிட்டுத் தான் சென்றார்.