ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் முதல் ஆளாக வாக்களித்த ரஜினிகாந்த்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கிய உடனேயே தனது வாக்கை பதிவு செய்தார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுவையில் உள்ள 1 தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் முன்பு காலையிலேயே வாக்களிக்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று காலை 7 மணிக்கு சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு வந்தார். அவர் வாக்குப்பதிவு துவங்கியவுடன் முதல் ஆளாக வாக்களித்தார்.

தனது வாக்கை பதிவு செய்த ரஜினிக்கு வாக்குச்சாவடியில் இருந்த தேர்தல் அதிகாரி அவரது விரலில் மை வைத்தார். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பல அரசியல் தலைவர்கள் வாக்களிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications