கேமரா முன்னால் நெருப்பு போல் நடிப்பை காட்டியவர் ஸ்ரீதேவி- ரஜினி புகழாரம்
கேமரா முன்னால் நெருப்பு போல் நடிப்பை காட்டியவர் ஸ்ரீதேவி.
Recommended Video

சென்னை: கேமரா முன்னால் ஸ்ரீதேவி வந்துவிட்டால் அப்படியே அவர் தனது நடிப்பை மிகவும் உக்கிரமாக வெளிப்படுத்துவார் என்றும் அவர் ஒரு பிறவி நடிகை என்றும் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.
துபாயில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரீதேவி மாரடைப்பால் இறந்து விட்டார். இந்த திடீர் இழப்பால் திரையுலகினர் மிகவும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இதுகுறித்து ரஜினிகாந்த் கூறுகையில், ஸ்ரீதேவி இறந்த செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. அவர் 3 மாதங்களுக்கு முன்னர் சென்னை வந்திருந்தபோது ஸ்ரீதேவி, போனி கபூர், நான் ஆகியோர் குடும்பத்தினருடன் சந்தித்தோம்.

யாராலும் ஈடு செய்ய முடியாது
என்னுடைய 2-ஆவது படத்திலிருந்து கூடவே நடித்தவர். எனது மிக நெருங்கிய நண்பர். அவருடைய இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது.

நினைவுகளில் இருப்பார்
அவரது இழப்பால் வாடும் போனி கபூர், இரு மகள்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்ரீதேவி இறந்தாலும் அவர் சினிமா மூலம் நம்முடைய நினைவுகளில் இருப்பார்.

உக்கிரமாக இருக்கும்
கேமராவுக்கு முன்னால், கேமராவுக்கு பின்னால் என இரு ஸ்ரீதேவிகள் இருப்பர். கேமராவுக்கு பின்னால் இருக்கும் ஸ்ரீதேவி எதுவுமே தெரியாதது போல் இருப்பார். ஆனால் கேமராவுக்கு முன்னால் அவருடைய நடிப்பு கரென்ட் பாசவது போல் உக்கிரமாக இருக்கும்.

இந்தியில் ஜொலித்தார்
யார் மீதும் கோபம் கொள்ளமாட்டார். இந்தியில் ஒரு வார்த்தை கூட தெரியாமல் அங்கு அத்தனை படங்களில் அதுவும் ஈஸியாக எப்படி நடித்தார் என்பது எங்களுக்கு ஆச்சரியம்தான்.

நண்பரை இழந்துவிட்டேன்
அவர் ஒரு பிறவி நடிகை. எனக்கு சினிமா துறையில் நெருங்கிய நண்பர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களுள் ஒருவரை நான் இழந்துவிட்டேன். மிகவும் வேதனையாக உள்ளது. அவரது இழப்பு இந்திய திரையுலகத்துக்கே மிகப் பெரும் இழப்பாகும் என்றார் ரஜினி.












Click it and Unblock the Notifications