நெல்லையில் ரஜினியின் மக்கள் மன்றத்துக்கு ஆள் சேர்க்கும் பணி... ரஜினி பேசும் வீடியோ வெளியீடு
நெல்லையில் ரஜினியின் மக்கள் மன்றத்துக்கு ஆட்கள் சேர்க்கும் பணியை அடுத்து அவரது பேச்சு அடங்கிய வீடியோ வெளியிடப்பட்டது.
நெல்லை: நெல்லையில் ரஜினி மக்கள் மன்றத்துக்கு ஆட்கள் சேர்க்கும் பணியை அடுத்து அவரது பேச்சு அடங்கிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதில் தமிழகத்தில் மிகப் பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
கடந்த 31-ஆம் தேதி ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். அதன்பின்னர் ஆங்கில புத்தாண்டு அன்று ரஜினி மக்கள் மன்றத்தை அவர் தொடங்கி வைத்தார். இதில் ஆட்களை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நெல்லையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் ரஜினி பேசும் வீடியோ ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அதில் ஒழுக்கம், கண்ணியத்துடன் ரசிகர்கள் ஒத்துழைக்க வேண்டும். அரசியல் என்பது பொதுநலம், சுயநலமல்ல. மக்களுக்கு நல்லது செய்வது மட்டுமே நமது நோக்கம்.
ஆண்டவன் அளித்துள்ள வாய்ப்பை சரியாக பயன்படுத்திகொள்ள வேண்டும். ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம், தமிழகத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வருவோம். குடும்பத்தை விட்டு அரசியலுக்கு வர வேண்டும் என சொல்லவில்லை அவர்களையும் கவனிக்க வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications