தலை சுத்திடுச்சுன்னு சொன்னதை கிண்டல் செய்வதா? ஜெ.இருந்தபோதே வாய்ஸ் கொடுத்த எனக்கா பயம்?: ரஜினிகாந்த்
ஒரு நிமிஷம் தலைச்சுத்திடுச்சி என்பதை கிண்டல் செய்கிறார்கள் என்று ரஜினி தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னரே கொள்கை குறித்து கேட்டபோது ஒரு நிமிஷம் தலைசுத்திடுச்சினு சொன்னதை கிண்டல் செய்கிறார்கள் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
சென்னை வேலப்பன்சாவடியில் ஏசிஎஸ் கல்லூரியில் எம்ஜிஆர் சிலையை ரஜினி திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில் , தலை சுற்றுகிறது என்பதை கிண்டல் செய்கிறார்கள்.

பெண் பார்க்க சென்றவனிடன் கல்யாண பத்திரிகை கேட்டது போல கொள்கை குறித்து கேட்டார்கள். மக்களிடம் பேசும் போது ஜாக்கிரதையாக பேச வேண்டும்.
ஜெயலலிதா இருக்கும் போது ஏன் வரவில்லை என்கிறார்கள். பயமா என்று கேட்டார்கள். ஜெயலலிதா இருந்த போதே நான் குரல் கொடுத்தேன்.
இப்போதுதான் நல்ல தலைவனுக்கு வெற்றிடம் இருக்கிறது. ஜெயலலிதாகட்சியை கட்டுக் கோப்பாக வைத்து இருந்தார். இந்தியாவிலேயே சிறந்த தலைவர்கள் ஜெயலலிதா, கருணாநிதி.
ஆனால் இப்போது வெற்றிடம் இருக்கிறது, அதை நான் நிரப்புவேன். ஐயா, நம்ம பக்கம் ஆண்டவனே இருக்கான் என்றார் ரஜினி .












Click it and Unblock the Notifications