இரும்பா, எறும்பா? பாவம் ரஜினியே கன்ப்யூஷ் ஆகிட்டாரு
Recommended Video

சென்னை: கல்வி நிறுவன அதிபரான ஏ.சி.சண்முகம் டாக்டர் பட்டம் பெற்றதை தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஹோட்டலில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அப்போது டாக்டர் பட்டம் பெற்ற ஏசி சண்முகத்துக்கு அவர் நினைவுப்பரிசு ஒன்றை வழங்கினார்.

அதில் ஏ.சி.சண்முகத்தை புகழ்ந்து பேசுவதாக நினைத்துக்கொண்டு தவறாக ஒரு கருத்தை தெரிவித்தார்.
அது என்னவென்றால், அவர் "எப்போதுமே இரும்பு மாதிரி வேலை செய்கிறார், அதனால்தான் எறும்பு மாதிரி இருக்கிறார்" என்றார் ரஜினி. பிறகுதான் தனது பேச்சின் தவறை உணர்ந்தார்.
"சாரி, எறும்பு மாதிரி வேலை செய்கிறார், அதனால்தான் இரும்பு மாதிரி இருக்கிறார்" என்று திருத்தி கூறினார் ரஜினி. மேலும், இதையும் ட்ரோல் பண்ண ஆரம்பிச்சிருவாங்க என்றும் கிண்டலாக சொல்லி சிரித்தார்.
பழமொழிகளை மாற்றி மாற்றி கூறியதற்காக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை நெட்டிசன்கள் கேலி செய்தனர். ரஜினிகாந்த் தூத்துக்குடி கலவரம் பற்றி கூறிய கருத்துக்கும் இணையதளத்தில் கேலிக்கு உள்ளானார். எனவேதான், இப்போது முந்திக்கொண்டு அவரே, ட்ரோல் செய்வார்கள் என கூறிக்கொண்டார்.












Click it and Unblock the Notifications