பத்ம விபூஷண் விருது பெருமை அளிக்கிறது: நடிகர் ரஜினிகாந்த் கருத்து
சென்னை: மத்திய அரசு அறிவித்த பத்மவிபூஷண் விருது தமக்கு பெருமை அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் குடியரசுத் தினத்துக்கு முன்பாக பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

நிகழாண்டுக்கான பத்மவிபூஷண் விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. அதன்படி நடிகர் ரஜினிகாந்த்துக்கு பத்ம விபூஷன் விருது அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Feeling deeply honoured for being awarded the Padma Vibhushan.My heartfelt thanks to my dear fans, well wishers & friends for all the wishes
— Rajinikanth (@superstarrajini) January 25, 2016 இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், பத்ம விபூஷண் விருது அறிவிப்பால் பெருமைப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன். என்னுடைய ரசிகர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications