For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழகத்தில் நாளை முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கலாம்: தலைமை காஜி அறிவிப்பு
தமிழகத்தில் நாளை முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் நாளை முதல் ரமலான் நோன்பு அனுசரிக்கப்படும் என தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் முக்கிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது. நேற்று பிறை தெரியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரமலான் பிறை தென்படாத காரணத்தால், (நாளை)28 ஆம் தேதி முதல் நோன்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப், தமிழகத்தில் நாளை முதல் ரமலான் நோன்பு காலம் துவங்குவதாக அறிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை பிறை தெரியாத காரணத்தால் 28 ஆம் தேதி முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கலாம் என்றும் கூறினார்.
Comments
ramzan tamil nadu islam muslims ரமலான் நோன்பு ரம்ஜான் தமிழ்நாடு வளைகுடா நாடுகள் இஸ்லாமியர்கள் இஸ்லாம் முஸ்லீம்
English summary
Ramadhan fasting will begun in Tamil Nadu on may 28th