திண்டிவனத்தில் ஓட்டுப் போட்ட ராமதாஸ், அன்புமணி... ஆட்சியமைப்போம் என பேட்டி!

Subscribe to Oneindia Tamil

திண்டிவனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மனைவி சரஸ்வதி, பாமக முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் திண்டிவனத்தில் இன்று ஓட்டுப் போட்டனர்.

ஓட்டுப் போட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் பேசுகையில் பாமக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

Ramadoss, Anbumani votes in Tindivanam

டாக்டர் ராமதாஸ் கூறுகையில், திராவிட கட்சிகள் இலவசம், மது கொடுத்து தமிழகத்தை சின்னாபின்னமாக்கி விட்டன.

வளர்ச்சி, முன்னேற்றத்தை முன்வைத்து அன்புமணி ராமதாஸ் ஓராண்டாக பிரசாரம் செய்து வந்தார். இளைஞர்கள், நடுநிலையாளர்கள் ஒட்டுமொத்தமாக முதன் முதலாக வாக்களிக்க முன்வந்துள்ளனர்.

தமிழகத்தில் மதுவை ஒழிக்கும் வல்லமை அன்புமணிக்கு உண்டு என பெண்கள் நம்புகின்றனர் என்றார்.

அன்புமணி கூறுகையில், சட்டசபைத் தேர்தலில் பாமக நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+