ஏழரை கோடி பேரின் நாக்குகளையும் அறுக்க வேண்டியிருக்குமே! தெம்பிருக்கிறதா.. ராமதாஸ் கேள்வி
Recommended Video

சென்னை: ஏழரை கோடி பேரின் நாக்குகளையும் அறுக்க வேண்டியிருக்குமே அமைச்சருக்கு தெம்பிருக்கிறதா என ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேனி, புதுக்கோட்டை, தஞ்சை என மாவட்ட தலைநகரங்களில் அதிமுக கண்டன பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் துரைக்கண்ணு பேசுகையில் யாரை பார்த்து லஞ்ச ஆட்சி என்கிறாய், குற்ற ஆட்சி என்கிறாய், தவறாய் பேசுகிறாய். தப்பாய் பேசினால் நாக்கை அறுத்துவிடுவோம். ஜாக்கிரதையாக இருங்கள்.

இது உத்தமர்களின் ஆட்சி. ஜெயலலிதா வழியில் பொற்கால ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா என்னென்ன செய்ய வேண்டும் என எண்ணினார்களோ அதனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் செய்து வருகின்றனர் என்று கூறி சர்ச்சையை கிளப்பினார்.
அதிமுக ஆட்சியை லஞ்ச ஆட்சி என தவறாக பேசுபவர்களின் நாக்கை அறுத்து விடுவேன்: அமைச்சர் துரைக்கண்ணு - அப்படியா... மொத்தம் ஏழரை கோடி பேரின் நாக்குகளை அறுக்க வேண்டியிருக்கும். அந்த அளவுக்கு தெம்பும், துணிச்சலும் ஊழல் அமைச்சருக்கு உண்டா?
— Dr S RAMADOSS (@drramadoss) September 26, 2018
இதுகுறித்து ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் அதிமுக ஆட்சியை லஞ்ச ஆட்சி என தவறாக பேசுபவர்களின் நாக்கை அறுத்து விடுவேன்: அமைச்சர் துரைக்கண்ணு - அப்படியா... மொத்தம் ஏழரை கோடி பேரின் நாக்குகளை அறுக்க வேண்டியிருக்கும். அந்த அளவுக்கு தெம்பும், துணிச்சலும் ஊழல் அமைச்சருக்கு உண்டா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications