ஜோரா கைத்தட்டுங்க... போட்டி சட்டசபையாம்... எதிர்க்கட்சி எப்படியெல்லாம் உழைக்கிறது பாருங்க? ராமதாஸ்
தமிழக அரசுக்கு போட்டியாக அண்ணா அறிவாலயத்தில் போட்டி சட்டசபை நடத்துகிறது. எதிர்க்கட்சி எப்படியெல்லாம் உழைக்கிறது பாருங்க என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
சென்னை: முன்பாவது கோட்டைக்கு செல்வார்கள். இப்போது அறிவாலயத்திலேயே கூட்டத்தை நடத்துவதால் அலைச்சல் மிச்சம் என்று திமுகவின் போட்டி சட்டசபையை ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதற்குள் சட்டசபை கூட்டத் தொடர் நேற்று முதல் கூடியது.
இந்நிலையில் முதல்வர் பதவி விலகும் வரை சட்டசபை கூட்டத் தொடருக்கு செல்ல மாட்டோம் என்று அறிவித்த ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் போட்டி சட்டசபையை இன்று கூட்டினார்.
ஜோரா கைத்தட்டுங்க...1
— Dr S RAMADOSS (@drramadoss) May 30, 2018
தமிழக அரசுக்கு போட்டியாக அண்ணா அறிவாலயத்தில் போட்டி சட்டப்பேரவை நடத்த திமுக முடிவு செய்திருக்கிறது. முன்பாவது கோட்டைக்கு செல்வார்கள். இப்போது அறிவாலயத்திலேயே கூட்டத்தை நடத்துவதால் அலைச்சல் மிச்சம். பாவம்... தமிழக மக்களுக்காக எதிர்க்கட்சி எப்படி உழைக்கிறது?
இது குறித்து ராமதாஸ் தனது டுவிட்டரில் கூறுகையில், ஜோரா கைத்தட்டுங்க...1
தமிழக அரசுக்கு போட்டியாக அண்ணா அறிவாலயத்தில் போட்டி சட்டப்பேரவை நடத்த திமுக முடிவு செய்திருக்கிறது. முன்பாவது கோட்டைக்கு செல்வார்கள். இப்போது அறிவாலயத்திலேயே கூட்டத்தை நடத்துவதால் அலைச்சல் மிச்சம். பாவம்... தமிழக மக்களுக்காக எதிர்க்கட்சி எப்படி உழைக்கிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.