பாறாங்கல் அளவுக்கு சுமையை ஏற்படுத்திவிட்டு கடுகளவு குறைத்தால் எப்படி?.. ராமதாஸ் கேள்வி
பாறாங்கல் அளவுக்கு தமிழக மக்களின் மீது சுமையை ஏற்றிவிட்டு கடுகளவு மட்டுமே குறைத்தால் எப்படி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை 100 சதவீதம் உயர்த்திவிட்டு, தற்போது வெறும் 4 முதல் 7 சதவீதம் மட்டுமே குறைப்பது என்ன நியாயம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பேருந்து கட்டண குறைப்பு குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புறநகர் பேருந்துகளில் கிலோமீட்டருக்கு 2 காசுகள் முதல் 10 காசுகள் வரை கட்டணம் குறைக்கப்பட்டிருக்கிறது. இது 3 விழுக்காடு முதல் 7 விழுக்காடு வரையிலான கட்டணக்குறைப்பு ஆகும். அதேபோல் நகரப் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணமும் அதிகபட்ச கட்டணமும் தலா 1 ரூபாய் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளன. இது 4 விழுக்காடு முதல் 20 விழுக்காடு வரையிலான கட்டணக்குறைப்பு ஆகும்.

7 சதவீதம்
100 விழுக்காடு அளவுக்கு கட்டணங்களை உயர்த்திய தமிழக அரசு இப்போது 3 விழுக்காடு, 4 விழுக்காடு, 7 விழுக்காடு என்ற அளவில் கட்டணங்களைக் குறைத்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற துடிக்கிறது.

ஓட்டக சுமை
பாலைவன பயணங்களின்போது ஒட்டகங்கள் மீது டன் கணக்கில் சுமைகளை ஏற்றும் அதன் உரிமையாளர்கள் ஒட்டகத்தை திருப்திப்படுத்தும் நோக்குடன் சில டப்பாக்களை மட்டும் ஒட்டகத்தின் காதுக்கு ஓசை கேட்கும் வகையில் வீசி எறிவார்கள். ஒட்டகமும் தம்மீது ஏற்றப்பட்டிருந்த சுமையில் பெரும்பகுதி குறைக்கப்பட்டு விட்டதாக நினைத்து சுமைகளை ஏற்றிக்கொண்டு வேகமாக செல்லும்.

தமிழக மக்கள் ஏமாற்றம்
அதேபோல் தமிழக மக்கள் மீது பாறாங்கல் அளவுக்கு கட்டண உயர்வை சுமத்திய தமிழக அரசு அதில் கடுகளவிற்கு குறைத்துவிட்டு மக்களுக்கு ஏதோ பெரிய நிவாரணத்தைக் கொடுத்துவிட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறது. இத்தகைய ஏமாற்று வேலைகளுக்கு ஒட்டகங்கள் வேண்டுமானால் ஏமாறலாம் தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்
எனவே ஏமாற்று வேலைகளை செய்து மக்களை ஏமாற்றும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபடக்கூடாது. மாறாக கட்டண உயர்வை முழுமையாக திரும்பப்பெற்று நிர்வாக சீர்த்திருத்தங்களின் மூலம் அரசுப் போக்குவரத்து கழகங்களை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு












Click it and Unblock the Notifications