பாமக கூட்டத்தில் கட்சியினர் ரகளை: பேச்சை பாதியில் நிறுத்திவிட்டு கிளம்பிய ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil
வேலூர்: அரக்கோணத்தில் நடந்த பாமக பொதுக்கூட்டத்தில் கட்சியினர் தொடர் ரகளையில் ஈடுபட்டதால் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது பேச்சை பாதியில் முடித்துக் கொண்டு கிளம்பிச் சென்றார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரக்கோணத்தில் பாமக பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடந்தது. கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

கூட்டம் துவங்கியதில் இருந்தே கட்சியினர் ரகளையில் ஈடுபட்டனர். அவர்கள் தொடர்ந்து சப்தம் எழுப்பிக் கொண்டு இருந்தனர். இதற்கிடையே பேசிய ராமதாஸ் கடுப்பாகி தனது பேச்சை பாதியில் நிறுத்திவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
முன்னதாக அவர் கட்சியினரின் ரகளைக்கு இடையே பேசுகையில்,
ஒவ்வொரு தலைவரும் தன்னை கிங் எனவும், குயின் எனவும் கூறுகையில் அன்புமணி ராமதாஸோ தன்னை மக்கள் சேவகன் என்கிறார் என்றார்.












Click it and Unblock the Notifications