ரமலான் பண்டிகையின் நோக்கம்.. காரைக்குடி பள்ளியில் மாணவர்கள் கொண்டாடிய ரம்ஜான்!
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் ரமலான் பண்டிகை 06.07.2016 அன்று மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு கிராமக் கல்விக் குழுத்தலைவர் கரு. ஆறுமுகம் தலைமையேற்றார். தலைமையாசிரியர் பீட்டர் ராஜா அனைவரையும் வரவேற்றார்.

பைத்துல்மால் மையத்தின் செயலர் ஜமால் ராஜா, மாணவர்களுக்கு ரம்ஜான் செய்தி வழங்கி அவர் தமது உரையில் ரமலான் பண்டிகையின் நோக்கம், நோன்பின் முக்கியத்துவம், தொழுதலின் அவசியம் குறித்தும், நம்மால் இயன்றவரை இல்லாதோருக்கு உதவுதல், பிறருடன் இணக்கமான உறவை ஏற்படுத்தி சகோதரத்துவத்தை வளர்த்தல், சமாதானத்தை கடைபிடித்தல், சுய ஒழுக்கம், நல்ல பழக்கவழக்கங்கள் போன்ற நற்ப்பண்புகளைப் எடுத்துக் கூறினார்.

மாணவர்கள் ரமலான் விழாவில் இஸ்லாம் இறை வாழ்த்து, பண்டிகை கொண்டாடும் நோக்கம் குறித்த நாடகம், பாட்டு, குரான் ஓதுதல் போன்ற கலை நிகழ்சிகளை நடத்தி காண்பித்தனர்.
இவ்விழாவில் பைத்துல்மால் மையத்தின் நிறுவனர் டாக்டர். கமாலுதீன் அவர்கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட செயலாளர் இனயத்துலா அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

பட்டதாரி ஆசிரியர் கோமதி ஜெயம் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் விஜயலெட்சுமி செய்திருந்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications