திருமணத்தை பற்றி கேட்டதற்கு பத்திரிக்கையை வாட்ஸ்அப் செய்த ராமசாமி... சத்யப்பிரியா வேதனை!
சசிகலா புஷ்பாவுடனான திருமணம் பற்றி கேட்டதற்கு கணவர் ராமசாமி பத்திரிக்கையை வாட்ஸ் அப் செய்ததாக பாதிக்கப்பட்ட சத்யப்பிரியா கூறியுள்ளார்.
Recommended Video

மதுரை : நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பாவுடனான மறுமணம் பற்றி கேட்டதற்கு கணவர் ராமசாமி பத்திரிக்கையை வாட்ஸ் அப் செய்ததாக பாதிக்கப்பட்ட சத்யப்பிரியா கூறியுள்ளார். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை மகப்பேறுக்கு நல்ல முறையில் அனுப்பி வைத்தவர் பெண் குழந்தை பிறந்தது முதலே தன்னுடனான தொடர்பை துண்டித்துவிட்டார் என்றும் சத்யப்பிரியா தெரிவித்துள்ளார்.
ராமசாமியின் மனைவி சத்யப்பிரியா சசிகலா புஷ்பா - ராமசாமியின் மறுமணம் குறித்து கூறியதாவது : வருகிற 26ம் தேதி டெல்லியில் உள்ள லலித் ஹாலில் சசிகலா புஷ்பாவிற்கும் என்னுடைய கணவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் மார்ச் 19ம் தேதி வெளிவந்தது. இதனையடுத்து கடந்த 20ம் தேதி இது குறித்து நான் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தேன்.
என்னுடைய கணவர் நான் இருக்கும் போதே எனக்குத் தெரியாமல் எப்படி வேறொரு திருமணத்தை செய்யலாம். நான் மகப்பேறுக்காக என்னுடைய தந்தையின் வீட்டிற்கு வந்துள்ளேன், என்னுடைய பெண் குழந்தைக்கு நியாயம் கிடைக்க வேண்டுமே என்று நான் ஆட்சியரிடம் மனு அளித்தேன்.
நீதிமன்றத்திலும் இது குறித்து வழக்கு பதிவு செய்தேன். நீதிபதி எனக்குரிய சட்ட பாதுகாப்பை அளித்துள்ளார், சசிகலா புஷ்பாவை மட்டுமல்ல எனக்கு ஒரு தீர்வு சொல்லாமல் ராமசாமி வேறு யாரையுமே திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

முதலில் மறுத்த ராமசாமி
இந்தத் திருமணம் குறித்து என்னுடைய கணவரை நான் தொடர்பு கொண்டு கேட்க முயற்சித்தேன். ஆனால் அவர் போனை எடுக்கவே இல்லை, இந்த சம்பவம் உண்மையா என்பதை நான் குறுந்தகவல் மூலம் கேட்டேன். அதற்கு அவர் இதில் உண்மை இல்லை என்று தான் முதலில் சொன்னார்.

பத்திரிக்கையை வாட்ஸ் அப் செய்த ராமசாமி
தான் சசிகலா புஷ்பாவிடம் வேலை மட்டுமே பார்ப்பதாக முதலில் கூறினார். அப்படியானால் சசிகலா புஷ்பாவின் கணவரே இருவரின் திருமணம் உண்மைதான் என்று கூறியிருப்பதை சுட்டிக்காட்டி கேட்டேன். அதற்கு பதிலாக எனக்கு திருமண பத்திரிக்கையை அனுப்பி வைத்தார்.

கருத்து வேறுபாடில்லை
கட்டிய மனைவிக்கே திருமண அழைப்பிதழை அனுப்பி வைக்கிறீர்களே இது சரிதானா என்று கேட்டேன். அதற்கு அவர் எந்த பதிலும் கூறவில்லை. எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை, அவரே தான் என்னை மகப்பேறுக்காக அனுப்பி வைத்தார். பெண் குழந்தை பிறந்தது முதலே அவர் என்னை தொடர்பு கொள்ளவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் தந்தை வீட்டில் தான் இருக்கிறேன்.

நம்பரை பிளாக் செய்துவிட்டார்
6 மாதமாக எங்களுக்குள் எந்த தொடர்பும் இல்லை, 3 மாதமாக தொலைபேசி, குறுந்தகவல்கள் கூட கிடையாது. இப்போதும் கூட என்னுடைய சகோதரியின் செல்போன் எண்ணில் இருந்து தான் வாட்ஸ் அப் செய்தேன். திருமண பத்திரிக்கையை அனுப்பிய கையோடு அந்த எண்ணையும் ராமசாமி பிளாக் செய்துவிட்டதாக சத்யப்பிரியா கூறியுள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications