சுவாதியை வெட்டிய அரிவாளில் 2 பேரின் ரத்தம்... கொலை வழக்கில் திடீர் திருப்பம்...!
சென்னை: சுவாதியை வெட்ட்ப பயன்படுத்தியதாகக் கூறப்படும் அரிவாளில் இரண்டு பேரின் ரத்தம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரின் ரத்தமாதிரி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேகரிப்பட்டது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் பெண் என்ஜினீயர் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் நெல்லையை சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், ராம்குமாரை நேற்று காலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் ரகசியமாக அழைத்து வந்தனர். அங்கு சிறைக்கைதிகள் வார்டில் அவரது ரத்தமாதிரி சேகரிக்கப்பட்டது.

தற்கொலை முயற்சி...
முன்னதாக போலீசார் கைது செய்தபோது தற்கொலைக்கு முயன்ற ராம்குமார் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்ததாகக் கூறப்பட்டது. இதனால் ஏற்பட்ட காயத்திற்கு நெல்லை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தொண்டை வலி...
தற்போது ராம்குமாருக்கு தொண்டை வலி இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே நேற்று ராயப்பேட்டை மருத்துவமனையில் அதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதோடு, தையல் போட்ட இடத்தில் வலி இருப்பதாக கூறியதால், அவருக்கு மருந்துகளும் தரப்பட்டன.

அரிவாளில் 2 பேரின் ரத்தம்...
இதற்கிடையே, ராம்குமாரின் ரத்த மாதிரி எதற்காக சேகரிக்கப்பட்டது என்பது குறித்து போலீஸ் வட்டாரத் தகவல்கள் கூறுகையில், "சுவாதியை வெட்ட பயன்படுத்திய அரிவாளில் 2 பேரின் ரத்தம் படிந்துள்ளது. அதில் ஒன்று சுவாதியின் ரத்தம் என்று தெரியவந்துள்ளது. எனவே, அந்த இன்னொரு ரத்தம் ராம்குமாருடையது தானா? என்பதை உறுதிபடுத்துவதற்காக அவரது ரத்தமாதிரி சேகரிக்கப்பட்டு உள்ளது" என்றனர்.

புதிய திருப்பம்...
இந்தத் தகவலால் சுவாதி வழக்கில் மேலும் குழப்பம் அதிகரித்துள்ளது. இதுவரை ராம்குமார் கூறியதாக வெளியான வாக்குமூலத்தில், ‘சுவாதியை வெட்டி விட்டு தப்பி வரும்போது தனக்கோ அல்லது வேறு யாருக்கோ அதே அரிவாளால் காயம் ஏதும் ஏற்பட்டதாகக் கூறப்படவில்லை' என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications