ராமநாதபுரத்தில் பள்ளி ஆசிரியை கழுத்தறுத்து கொலை - கணவரிடம் போலீஸ் விசாரணை
ராமநாதபுரம் மாவட்டம் கோட்டைமேட்டில் உள்ள தனியார் பள்ளியின் ஆசிரியை சண்முகப்பிரியா கொலை செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கோட்டைமேட்டில் உள்ள தனியார் பள்ளியின் ஆசிரியை கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட ஆசிரியை பெயர் சண்முகப்பிரியா என்பதாகும். இவர், ராமநாதபுரம் மாவட்டம் கோட்டைமேட்டில் பகுதியில் வசித்து வரும் மோகன்ராஜா என்பவரின் மனைவியாவார்.
இன்று அதிகாலையில் சண்முகப்பிரியா கழுத்தறுக்கப்பட்ட நிலையில் அவரது வீட்டின் அருகே சடலமாக கிடந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமணைக்கு சண்முகப்பிரியவின் உடலை அனுப்பி வைத்தனர்.
ஆசிரியை கொலை குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கழுத்தில் கயிறு இறுக்கி கொலை செய்து விட்டு கழுத்தை அறுத்துள்ளனர். கொடூர கொலை குறித்து கணவர் மோகன்ராஜாவை சந்தேகத்தின் பேரில் கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.