தமிழ்நாடு முழுவதும்.. நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.. தலைமை காஜி அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை (சனிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாவூதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.
இஸ்லாமிய மக்களின் மிக முக்கியமான பண்டிகை ரம்ஜான் ஆகும். ஈகைத் திருநாளாக கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகை இஸ்லாமிய நாட்காட்டியின் படி ஒன்பதாவது மாதமாக வரும் ரமலான் மாதத்தில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. ரமலான் நோன்பு கடைபிடிப்பது இஸ்லாமியர்களின் ஐந்து கோட்பாடுகளில் ஒன்றாகும்.

ரம்ஜான் என்று அழைக்கப்படும் நோன்பு பெருநாள் பண்டிகை ரமலான் மாதம் 29 அல்லது 30 நாட்கள் நோன்பு நோற்ற பிறகு உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. ஈகைத் திருநாள் என்று தமிழ் மக்களால் அழைக்கப்படும் இந்த நாளில் ஏழை மக்களுக்கு அரசி அல்லது கோதுமை போன்ற பொருட்களை இஸ்லாமியர்கள் வழங்க வேண்டும்.
அரபு மாதங்களில் ரமலானுக்கு அடுத்த மாதமான ஷவ்வாலின் முதல் நாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். பிறை தென்படுவதன் அடிப்படையில் ரமலான் மாதம் 29 நாட்களா அல்லது 30 நாட்களா என்பது முடிவு செய்யப்படுகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் நாளை (ஏப்ரல் 22) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாவூதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை காஜி சலாவூதீன் முகமது அயூப் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "ஷாவ்வால் மாத பிறை இன்று (வெள்ளிக்கிழமை) மாலை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காணப்பட்டது. எனவே நாளை (சனிக்கிழமை) தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறதது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications