For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நைஸாக மலேசியாவுக்குக் கிளம்பும் ரங்கசாமி.. எதற்காக?

Google Oneindia Tamil News

புதுச்சேரி: ஏன் போகிறார், எதற்காகப் போகிறார், யாரைப் பார்க்கப் போகிறார்.. இதுதான் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி குறித்து தற்போது புதுவையில் பரபரப்பாக பேசப்படுகிறது.

அவர் அப்படிப் போகும் இடம் உள்ளூர் அல்ல... மலேசியா. இன்று அவர் மலேசியாவுக்குப் பயணப்படுகிறார். ஆனால் ஏன் போகிறார், எதற்காகப் போகிறார், யாரைப் பார்க்கப் போகிறார் என்பது குறித்து அரசுத் தரப்பில் எந்தத் தகவலும் இல்லை.

ரங்கசாமியுடன் ரோடியர் மில் அதிபர் பாலனும் உடன் செல்கிறார். இவர்கள் அங்கு போய் என்ன செய்யப் போகிறார்கள் என்பது கூடத் தெரிவிக்கப்படவி்ல்லை.

Rangasamy

இது அரசு முறைப் பயணம் இல்லை என்று கூறப்படுகிறது. தனிப்பட்ட முறையில் ரங்கசாமி மலேசியா செல்வதாகவும் தெரிகிறது. மேலும் மலேசியாவுக்குப் போய் அங்குள்ள பத்துக் குகை முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட அவர் போவதாகவும் கூறப்படுகிறது.

அரசு முறைப் பயணமாக புதுச்சேரி செல்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருந்தார் ரங்கசாமி. ஆனால் மத்திய அரசு அனுமதி தரவில்லை. இதனால் தனிப்பட்ட பயணமாக அவர் கிளம்பியுள்ளார்.

நவம்பர் 13ம் தேதி தனது மலேசியப் பயணத்தை முடித்துக் கொண்டு ரங்கசாமி புதுவை திரும்புகிறாராம்.

English summary
Puducherry CM Rangasamy is visiting Malaysia in a personal tour.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X