திருச்சி : முன்னாள் துணைமேயர் ஆஷிக் மீரா மீது பலாத்கார வழக்கு: விரைவில் கைது?
திருச்சி: திருச்சி முன்னாள் துணை மேயர் ஆசிக் மீரா மீது பாலியல் பலாத்காரம், கருக்கலைப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரிதுறை சாலை பகுதியில் வசிப்பவர் துர்கேஸ்வரி. முன்னாள் ராணுவ அதிகாரியின் மகளான இவர், திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் மகளிர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

ஆஷிக்மீரா மீது புகார்
அதில், கடந்த ஒன்றரை வருடமாக, தன்னை முன்னாள் அமைச்சர் மரியம்பிச்சையின் மகனும், திருச்சி துணை மேயருமான ஆசிக் மீரா, காதலித்து, பெயரளவில் திருமணம் செய்து, தன்னோடு வாழ்ந்ததாகவும், அதில் மூன்று முறை கருவுற்றதாகவும், இரண்டு முறை வற்புறுத்தி கருவை கலைத்ததாகவும், தற்போது தான் மீண்டும் கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொண்ட அவர், மீண்டும் கருவை கலைக்கச் சொல்லி மிரட்டுவதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
கொலைமிரட்டல் விடுத்த ஆஷிக்
இந்நிலையில், தற்போது தனக்கு பெண் குழந்தை பிறந்த பிறகும், துணை மேயர் ஆசிக் மீரா தன்னையும், தன் குழந்தையையும் கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும், எனவே, தன்னையும், தன் குழந்தையையும் காப்பாற்றக்கோரி திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் பொன்மலை மகளிர் காவல்நிலையம் உள்ளிட்டவற்றுக்கு புகார் கொடுத்தார்.
காவல்துறை அலைக்கழிப்பு
ஆனால், அந்த புகாரை வாங்காமல், துர்காவை காவல்துறையினர் அலைக்கழித்தனர். இதையடுத்து, நீதி கேட்டு முதல்வர் தனிப்பிரிவுக்கு துர்கா மனு அனுப்பினார். அடுத்து தன்னை ஏமாற்றிய துணை மேயர் ஆசிக் மீரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 14ஆம் தேதி பொன்மலை மகளிர் காவல்நிலையத்தில் துர்கா மீண்டும் புகார் கொடுத்தார்.
ஆஷிக் மீரா ராஜினாமா
காவல்துறையினர் புகாரை வாங்க மறுத்ததால், ஆசிக் மீரா மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி காவல் நிலையத்திற்குள்ளேயே உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். இதையடுத்து, கடந்த 16ஆம் தேதி துணை மேயரான ஆசிக் மீரா, தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பலாத்கார வழக்குப் பதிவு
இந்நிலையில், ஆசிக் மீரா மீது பாலியல் பலாத்காரம், முறையற்ற திருமணம், கருக்கலைப்பு, கொலை மிரட்டல், அனுமதி இன்றி உறவு வைத்தல் என 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, தலைமறைவாக உள்ள ஆசிக் மீராவை, முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் வரவுள்ள 30ஆம் தேதிக்குள் கைது செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ள போலீசார், ஆஷிக்மீராவை தீவிரமாக தேடத் தொடங்கியுள்ளனர். போலீஸ் வைத்த பொறியில் சிக்குவாரா ஆஷிக்மீரா?.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications