அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத்
தென்காசி: தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் ஆகியோர் திமுகவில் இணைந்துள்ளனர். தான் அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி தனக்கு பயிற்சி வழங்கியதாக ரவீந்திரநாத் கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு ஒரு சில நாட்களில் வெளியாகவுள்ளது. திமுக கூட்டணி ஆட்சியை தக்க வைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் பல முன்னாள் அமைச்சர்கள் திமுகவில் இணைந்துள்ளனர். பிரம்மாண்ட கூட்டணி அமைத்து திமுக தொகுதி பங்கீடை செய்து வருகிறது. [Raveendranath]

கனிமொழி அக்கா ஆலோசனை
இந்நிலையில் திமுகவில் இணைந்த ஓ. பன்னீர்செல்வம் நேற்று முதல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். தென் மாவட்டங்களில் கவனம் செலுத்த திமுக தலைமை அவரை அறிவுறுத்தியுள்ளது. அவருடன் அவரின் மகன் ஓ.பி ரவீந்திரநாத்தும் சென்றுள்ளார். சட்டமன்ற தேர்தலில் போடி மற்றும் ஆண்டிப்பட்டி தொகுதிகளுக்கு ரவீந்திரநாத் விருப்பமனு அளித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ஓ.பி. ரவீந்திரநாத், "நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அக்காவிடம் செல்போனில் பேசினேன். நாடாளுமன்றத்தில் முதல் கூட்டத்தில் கலந்துகொள்ள வருகிறேன் என்று ஆலோசனை கேட்டேன். நாங்கள் 5 ஆண்டு காலம் நாடாளுமன்றத்தில் எம்பியாக இருந்துள்ளோம். எனக்கு அப்போது பல்வேறு ஆலோசனைகள் வழங்கியுள்ளார். அப்போது நான் முதல்முறையாக எம்பியாக சென்றேன்.
ஊக்கப்படுத்தியவர்
நான் மாற்று இயக்கத்தில் இருந்தால் கூட என்னை ஊக்கப்படுத்தி, இந்த இடத்தில் இப்படித்தான் பேச வேண்டும் என்று எனக்கு பயிற்சியளித்தவர் கனிமொழி அக்கா. இப்போது கூட தென்காசி மாவட்டம் செல்வதாக அவரிடம் கூறினேன். தென்காசி சிறப்பான மாவட்டம், அங்குள்ள நிர்வாகிகளிடம் சொல்லியுள்ளேன். சிறப்பான ஏற்பாடுகளை செய்வார்கள் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடப்பதால் என்னால் வர முடியவில்லை. நீங்கள் சென்று வாருங்கள்" என்று வாழ்த்தி அனுப்பினார்.
-
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது?












Click it and Unblock the Notifications