2 வாக்குச் சாவடிகளில் இன்று நடக்கவிருந்த மறுவாக்குப்பதிவு 10ம் தேதிக்கு தள்ளிவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் சேலம், நாமக்கல் தொகுதிகளில் தலா ஒரு வாக்குச் சாவடியில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மறு வாக்குப்பதிவு தற்போது 10ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சேலம் தொகுதிக்குட்பட்ட புற்றுமாரியம்மன் கோவில் பகுதி வாக்குச் சாவடி மற்றும் நாமக்கல் தொகுதிக்குட்பட்ட, மல்லசமுத்திரம், கோட்டப்பாளையம் வாக்குச் சாவடியிலும் மின்னணு வாக்குப்பதிவு பிரச்சினை காரணமாக மறு வாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

இன்று இந்த மறு வாக்குப்பதிவு நடைபெறுவதாக இருந்தது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதிகளில தண்டோரா போட்டுச் சொல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது மறு வாக்குப்பதிவு 10ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications