ஜெ. மரணம்.. எந்த விசாரணைக்கும் ரெடி -அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி
ஜெயலலிதா மரணம் தொடர்பான எந்த விசாரணைக்கும் தயாராக இருப்பதாக அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் யாரும் தலையிடவில்லை என்றும், வழங்கப்பட்ட சிகிச்சையில் எந்த தவறும் ஏற்படவில்லை என்றும் அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார். இது தொடர்பாக எந்த விசாரணைக்கும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர் டிசம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்தார்.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா மரணம் பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இதனிடையே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைத்தால் தாம் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த பிரதாப் ரெட்டி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தபோது இதனை கூறினார். ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்கும் போது யாரும் தலையிடவில்லை என்று கூறிய அவர், சிகிச்சை அளித்ததில் எந்த தவறும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த போது பலமுறை செய்தியாளர்களை சந்தித்த பிரதாப் ரெட்டி, நலமோடு இருப்பதாகவும், ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என்றும் கூறி வந்தார். திடீரென இதய முடக்கம் ஏற்பட்டு ஜெயலலிதா மரணமடைந்து விட்டதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் டிசம்பர் 5ஆம் தேதி அறிவித்தது.
ஜெயலலிதா மரணமடைந்து 7 மாதங்கள் கடந்துள்ள நிலையில் அவரது மரணம் பற்றிய சந்தேகங்கள் பலராலும் எழுப்பப்படுகிறது. இதற்கான விடை எப்போது கிடைக்கும் என்பது உண்மையான அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications