For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கணவனுக்கு இரவில் தூக்க மாத்திரை.. கள்ளக்காதலனுடன் கூத்தடித்த மனைவி!

கள்ளக்காதல் விவகாரத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கள்ளக்காதலனுடன் கூத்தடித்த மனைவி- வீடியோ

    சென்னை: இந்த பாழும் கள்ளக்காதல் எத்தனை பேர் இன்னும் சந்தி சிரிக்க வைக்க போகுதோ தெரியல. இன்னும் அபிராமி கதையே ஓய்ந்த மாதிரி இல்லை. அதுக்குள்ளே இன்னொரு கள்ளக்காதல் விவகாரம் கைது வரை சென்றுவிட்டது.

    அண்ணாநகர் கிழக்கு, 'எல்' பிளாக்கைச் சேர்ந்தவர், ஞானசூரியன், வயது 42. ரயில்வே ஊழியராக உள்ளார். இவருடைய மனைவி உமாதேவி, இவருக்கு வயது 41. 2 மகள்கள் உள்ளனர்.உமாதேவிக்கு தனலட்சுமி என்ற தோழி இருக்கிறார். இவரது சகோதரர் பெயர் மணிகண்டன் 42. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

    Real Estate Agent arrest in Illicit affair in Chennai

    கடைசியில், உமாதேவியும், மணிகண்டனும் பழக்கமாகி நெருக்கமும் ஆயிட்டாங்க. உமாதேவியின் வீட்டுக்கு மணிகண்டன் வருவது, போவது என்று ஆரம்பமாயின. கள்ளக்காதல் தொடங்கியது. பிறகுதான் ஞானசூரியனுக்கு தெரியவந்தது, தனக்கு தன் மனைவி தினமும் இரவில் தூக்க மாத்திரை கலந்துகொடுத்துவிட்டதும், தான் தூங்கிய பிறகு மணிகண்டனை வீட்டுக்கு வரவழைத்து ஜாலியாக இருப்பதும்.

    இதனால் மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த ஞானசூரியன் அண்ணாநகர் போலீசில் இதுகுறித்து புகார் செய்ததுடன், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருந்தார். இதையடுத் புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மணிகண்டனை அதிரடியாக கைது செய்தனர்.

    English summary
    Real Estate Agent arrest in Illicit affair in Chennai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X