செம்மரக் கடத்தலும்... செத்துப்போன அப்புவும்.. தமிழக தொழிலாளர்கள் சீரழியக் காரணமான தாதா!
சென்னை: சங்கரராமன் கொலை வழக்கில் பிரபலமான தாதா அப்புதான் தமிழகத்தில் செம்மரக்கடத்தல் தொழிலில் முதன்மையாக ஈடுபட்டவர் ஆவர். இவர்தான் அதிக அளவில் தமிழக கூலித் தொழிலாளர்களை ஆந்திராவிற்கு அனுப்பி மரங்களை வெட்டி கடத்தியவர் என்றும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செம்மரக்கடத்தல் வழக்கில் கைதானா அப்பு, ஆந்திரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் எலும்பு புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சமீபத்தில் உயிரிழந்தார்.

யார் இந்த அப்பு?
கம்சானி கோபாலகிருஷ்ண மூர்த்தி என்கிற அன்புசெல்வம் என்கிற அப்பு ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், வெதுரு குப்பம் மண்டலம் பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் பல ஆண்டுகளுக்கு முன் பிழைப்பு தேடி சென்னைக்கு வந்தார்.

தாதா பின்னணி
அரசியல் பின்பலம் கொண்ட இவர் மீது கொலை, கடத்தல், கட்டப்பஞ்சாயத்து போன்ற 15 வழக்குகள் சென்னை போலீஸாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பிரபலப்படுத்திய கொலை
சங்கரராமன் கொலை வழக்கு, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் கொலை முயற்சி வழக்கு, 2 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் சென்னகேசவுலு என்பவர் கொல்லப்பட்ட வழக்கு ஆகியவையும் அப்பு மீது பதிவானது. சங்கரராமன் கொலை வழக்கில் இருந்து விடுதலையான அப்பு பின்னர் ஒதுங்கி வாழ ஆரம்பித்தார் அப்பு.

செம்மரக்கடத்தல்
இந்நிலையில் ஸ்ரீகாளஹஸ்தி கொல்லபல்லி வனப்பகுதியில் இருந்து கடத்தப்பட்ட செம்மரங்களை, அப்பு சட்டவிரோதமாக வாங்கியதாக ஸ்ரீகாளஹஸ்தி போலீஸார் இவரை தேடிவந்தனர். மேலும் இவர் மீது ஆந்திர மாநிலத்தில் பல்வேறு செம்மர கடத்தல் வழக்குகளும் நிலுவையில் இருந்தன. ஆந்திர போலீஸார் தேடிவரும் செம்மர கடத்தல்காரர் கொல்லம் கங்கிரெட்டிக்கு,அப்பு நெருங்கிய நண்பர் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
சில ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அப்புவை சிறப்பு ஆயுதப்படை போலீஸார் சித்தூரில் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மரணித்த அப்பு
கடந்த ஜனவரி மாதம் எலும்பு புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த அப்பு காக்கிநாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த பிப்ரவரி மாதம் ஆந்திரா சிறையிலேயே உயிரிழந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. செம்மரக்கடத்தலில் அப்பு போட்ட விதைதான் இன்றைக்கு விருட்சமாகி நிற்கிறது என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications