ஜனவரி 7ம் தேதி முதல் 48 நாட்களுக்கு யானைகளுக்கு நலவாழ்வு முகாம்: தமிழக அரசு
சென்னை: தமிழக கோவில்களுக்கும், திருமடங்களுக்கும் சொந்தமான 43 யானைகளுக்கு வரும் ஜனவரி மாதம் 7ம் தேதி முதல் தொடர்ந்து 48 நாட்களுக்கு நலவாழ்வு முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

இந்த ஆண்டு (2015-2016) திருக்கோயில்களுக்கும் திருமடங்களுக்கும் சொந்தமான 41 யானைகள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 2 யானைகள் ஆக மொத்தம் 43 யானைகளுக்கு 2016-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 7ஆம் நாள் முதல் 48 நாட்களுக்கு கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், தேக்கம்பட்டி, வன பத்ரகாளியம்மன் திருக்கோயிலை ஒட்டிய பவானி ஆற்றுப்படுகையில் "யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம்" நடத்திட முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
முகாமில் கலந்து கொள்ள உள்ள யானைகளுக்கான மொத்த செலவுத் தொகை ரூ. 1,04,72,000-த்தை அரசு ஏற்பதற்கும் ஆணையிட்டுள்ளார்.
முகாமிற்கு வர மறுக்கும் யானைகளை வற்புறுத்தி முகாமுக்கு அழைத்துச் செல்ல வேண்டியதில்லை எனவும் நோயுற்று இருக்கும் யானைகளை முகாமிற்கு அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும், முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளதோடு, தற்போது இருக்கும் இடத்திலேயே இந்த யானைகளுக்கும் முகாமில் வழங்கப்படுவது போன்ற உணவு, மருத்துவ வசதி ஆகியன வழங்கப்பட வேண்டும் எனவும் ஆணையிட்டுள்ளார்.
யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமிற்கு தேவையான ஆயத்தப் பணிகள் அனைத்தும் தொடங்கப்பட்டுள்ளன.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆணையின்படி யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமிற்கு, தகுதியுள்ள யானைகளை தேர்வு செய்து 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ந் தேதி முதல் பிப்ரவரி மாதம் 23-ந் தேதி வரை கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், தேக்கம்பட்டி, வனபத்ரகாளியம்மன் திருக்கோயிலை ஒட்டிய பவானி ஆற்றுப்படுகையில் திருக்கோயில்கள் மற்றும் திருமடங்களைச் சேர்ந்த யானைகளுக்கு 48 நாட்கள் "யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம்" நடைபெறும்.
முகாமிற்கு வர மறுக்கும் யானைகள் நோயுற்று இருக்கும் யானைகள் ஆகியவற்றிற்கு தற்போது அவைகள் இருக்கும் இருப்பிடத்திலேயே முகாமில் வழங்கப்படுவது போன்ற உணவு, மருத்துவ வசதி ஆகியன வழங்கப்படும்.
மேலும், மேற்கண்ட யானைகளை நல்ல முறையில் பராமரித்திட ஏதுவாக யானைகள் பராமரிப்பு குறித்து நன்கு அறிந்த வல்லுநர்களைக் கொண்டு யானைப்பாகர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications